Showing posts with label பரிகாரம். Show all posts
Showing posts with label பரிகாரம். Show all posts

செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்


அறிவியல்பூர்வமான இந்து மதம்

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.

கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு-ஸ்ரீதர்ப்பணே…வரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா வின்நானிகள் பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.
இப்போது சொல்லுங்கள்... ...உலகில் மிகச் சிறந்தது நமது இந்து மதமா? இல்லை மற்றவைகளா?
நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை...

சர்வபிரச்னைகளுக்கும் நிவாரணி: ஓம் சிவசிவ ஓம்

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள்.இதில் அனேக உட்பிரிவுகள் உண்டு.அவைகள் சிவ தீட்சை பெற்றவர்களுக்குத்தான் தெரியும்.மந்திரங்களில் ஜெபிக்க எளிதானது சிவமந்திரம்தான். நமசிவாய,சிவாயநம,சிவாயசிவ,சிவசிவ :இவைகளை ஒரு பக்குவம் அடைந்தவர்கள் தான்,தகுதி பெற்றவர்கள் தான் ஜெபிக்க வேண்டும்.இல்லாவிட்டால்,எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.மந்திர சக்தியும் வேண்டும்;குடும்பத்திலும் இருக்க வேண்டும்;அனுஷ்டானங்களும் செய்யமுடியாத நிலை இக்கால வேகமான வாழ்க்கை நிலை என்பது அனைவரும் அறிந்ததே!!!

இது சம்பந்தமாக,பல சிவனடியார்களை அணுகி,அடிபணிந்து வேண்டிக்கொண்டதில் ஒரு எளிமையான மந்திரம் கிடைத்தது.அம்மந்திரம் தான் “ஓம் சிவசிவ ஓம்”/
இதை ஜாதி மத இனப் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்.ஒரே தகுதி சைவ உணவு பழக்கமும்,எந்த உயிரையும் துன்புறுத்தாத ஜீவகாருண்ய உணர்வும் மட்டுமே இருந்தால் போதும்.
இதற்கு தீட்சை பெற வேண்டியதில்லை;ஓம் என்னும் அட்சரத்தில் ஆரம்பித்து ஓம் என்னும் அட்சரத்தில் முடிவதால், குடும்பஸ்தர்களுக்கு ஏற்றது.அவர்களுக்கு அருளும் பொருளும் ஒருங்கே கிடைக்கும்.எல்லா மந்திரங்களும் இதில் அடக்கம் என்பதால்,வேறு எந்த மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.

முதலில் குலதெய்வத்தை வணங்கிக் கொள்ள வேண்டும்.(அது தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடவேண்டும்) பிறகு விநாயகரை வழிபட வேண்டும்.பிறகு தினமும் காலை 108 முறையும்,மாலை 108 முறையும் ஓம் சிவசிவ ஓம் என்ற மந்திரத்தை ஜபித்துக்கொண்டே வரவேண்டும்.ஒரு சில நாட்களிலேயே நமது நீண்ட காலப் பிரச்னைகள்,நோய்கள் தீர ஆரம்பிக்கும்.உடனே விட்டுவிடக்கூடாது.
அமைதியான மனநிலையில் தான் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும்.நம்பிக்கைதான் முதலீடு.ஒரு அமாவாசையன்று இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
21 வயதிற்கு மேற்பட்ட எவரும் இந்த மந்திரத்தை தினமும் ஜபித்துவரலாம்;பவுர்ணமி,அமாவாசை,சிவராத்திரி, தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் இந்த மந்திரத்தை ஜபிக்க பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.
எந்த மலையில் இருந்தாலும்,எந்த கடலில் இருந்தாலும்,எந்த வனத்தில் இருந்தாலும் இந்த மந்திரம் உங்களைக் காப்பாற்றும்.சூட்சுமமாக இயங்கும் சிவ கணங்கள் வந்து உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும்.அதுவும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டு சென்றால்,அடுத்த சில நாட்களில் கர்மப்பிரச்னைகள் திடீரெனத் தீரும் என்பதை அனுபவத்தில் உணரலாம்.

பொதுவாக நடக்கும்போது எந்த மந்திரத்தையும் ஜபிக்கக்கூடாது என்பது விதி;மீறி மந்திர ஜபம் செய்தால், விபத்து ஏற்படும்;வாகனங்கள் ஓட்டும்போதும் இதேபோல் மந்திரஜபம் ஜபிப்பது கூடாது.ஆனால்,திருவண்ணாமலை கிரிவலத்தின் போது நமது வழிபாடே கிரிவலமாக இருப்பதால்,அப்போது மட்டும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கலாம்.

பதவி உயர்வு,பதவி வேண்டுவோர் ஞாயிறு இதை நோன்புடன் ஜெபிக்க வேண்டும்.
நல்ல வாழ்க்கைத்துணை வேண்டுவோர் திங்கள் கிழமை நோன்புடன் இதை ஜபிக்க வேண்டும்.
தீராத நோய்கள் தீர செவ்வாய்க்கிழமையன்று நோன்பு இருந்து ஜபிக்கவேண்டும்.
கல்வி,வித்தைகளில் நல்ல தேர்ச்சியடைய புதன் கிழமைகளில் நோன்புடன் ஜபித்துவரவேண்டும்.

ஆத்மஞானம் பெற வேண்டின் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்று ஜபிக்க வேண்டும்.
பண நெருக்கடி நீங்கவும்,செல்வ வளம் பெருகவும் வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம் சிவசிவ ஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
கண்திருஷ்டி,செய்வினைக் கோளாறு,மனக்கோளாறு நீங்கிட சனிக்கிழமைகளில் நோன்பிருந்து இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

விபூதி,ருத்திராட்சம் போன்ற அருட்சாதனங்களை அணிந்து எந்த மந்திரம் ஜபித்தாலும் உடலில் மின் அருட்சக்தி கூடிவிடும்.

சிவபெருமானின் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் அல்லது மாத சிவராத்திரியன்று அல்லது மாதப் பிரதோஷம் அல்லது சனிப்பிரதோஷம் அன்று திருவண்ணாமலைக்கு வந்து,உடலெங்கும் விபூதி பூசி,கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து,வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு,விரதமிருந்து(சாப்பிடாமல்) கிரிவலம் செல்ல வேண்டும்.அப்படி கிரிவலம் செல்லும் 14 கி.மீ.தூரம் முழுக்க (சுமார் 6 மணி நேரம்) ஓம் சிவசிவஓம் என ஜபித்து வந்தாலே,ஒரு முறை இப்படிச் செய்தாலே,நமது ஊழ்வினை தீர்ந்துவிடும்.நாத்திகர்கள் கூட இதை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கட்டும்;மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகளும் இதை பரீட்சித்துப் பார்க்கலாம்;ஆன்மீக அன்பர்களும் இதை சக்திவாய்ந்த வழிபாடாக,ஒரு தவமாக செய்து மனநிம்மதியும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பெறமுடியும்.
இந்தத் தகவல்களை வழங்கியவர்: அருட் திரு:டாக்டர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.


நன்றி : திரு. கை. வீரமுனி அவர்கள் (www .aanmigakkadal.com

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி, துர்கை, பட்டத்தரச்சி, பெரிய மாரி, மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச் செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.


ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.


பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.


இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ.
 

தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்லோகம்

'ரோஹிணி நட்சத்திரத்தில் 12 வருட காலம் சனி பகவான் வாசம் செய்து வெளியேறினால் ரோஹிணி சகட பேதம் எனும் கடும் பஞ்சம் ஏற்படும். அதை எவராலும் தடுக்க முடியாது!' என்பதை வசிஷ்ட மகரிஷி மூலம் அறிந்த தசரத சக்ரவர்த்தி, ரோஹிணியை விட்டு சனி பகவான் வெளியேறுவதைத் தடுக்க முயன்றார்; முடியவில்லை. இறுதியில் அவர், கீழ்க்கண்ட ஸ்லோகத்தைத் தானே இயற்றி வழிபட்டு சனி பகவானின் அருளைப் பெற்று, கடும் பஞ்சம் ஏற்படுவதைத் தடுத்தாராம்.


இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சனி தோஷம் மட்டுமல்ல; இதர கோள்களினால் ஏற்படும் கெடு பலன்களும் நீங்கி நலம் பெறலாம்.


ப்ரீதோஸ்மி தவராஜேந்திர ஸ்தோத்ரேணாநேந ஸம்ப்ரதி
அதேயம் வாவரம் துப்யம் ப்ரீதோஹம் ப்ரததாமிசத்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய:படேன் நிஹ மாநவ:ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்யவைம்ருத்யுஸ்தான கதேவாபி ஜன்மஸ்தான கதேபிவாய: பு மான் ஸ்ரத்தயா யுக்த: சுசி: ஸ்தாத்வா ஸமாஹித:சமீபத்ரை: சமர்ப்யர்ச்ச ப்ரதிமாம் லோஹஜாம் மமமாஷோ தனம் தினலர் மிஸ்ரம் தத்யால்லோஹம் து தக்ஷிணாம்க்ருஷ்ணாம் காம் மஹீஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயேமதிது நேது விசேஷேண ஸ்தோத்திரரேணா நேநபூஜயேத்

தேவ கடன் , ரிஷி கடன், பித்ரு கடன் - உங்களுக்கு உண்டா?

தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன்  -  இந்த மூன்று கடன்களும் எப்படி ஏற்படுகின்றன?ஜாதக வாயிலாக இதை எப்படி அறியலாம்? அதை எப்படி சரி செய்வது?

கடமையைச் செய்யாமல் விடுதலே கடன் எனப்படும்.

தேவகடன் என்பது நித்திய பூஜையைச் செய்யாமல் விடுவது;குல தெய்வத்தை வழிபடாமல் இருப்பது;கோயில் திருப்பணியை தொடங்கிவிட்டு பாதியில் விட்டுவிடுவது; நேர்த்திக்கடன்களை செய்யாமல் விடுவது;
தவிர கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருடுதல்;கோவில் சிலைகளைத் திருடுதல்;கோவிலின் பெயரைச்சொல்லி வருமானம் பார்த்தல்; கோயிலுக்குள் தகாத காரியங்கள் செய்தல் ஆகும்.
இவற்றை ஜாதகம் வாயிலாக, லக்னத்துக்கு 5ஆம் இடம்,சூரியன்,சனி இவர்களின் இருப்பைக் கொண்டு அறியமுடியும்.

ரிஷி கடன் இந்த கலிகாலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.ஏனெனில், தற்காலத்தில் நிஜமான ரிஷிகள் மிகக்குறைவாக இருக்கின்றனர்.

முற்காலத்தில் வீடு தேடிவந்த ரிஷிகளை சரியாக உபசரிக்காமல் விடுவதால் ரிஷிகள் விடும் சாபமே ரிஷிகடன் ஆகும்.இந்த ரிஷிகடனை 12ஆம் இடம்,குருவின் நிலை,12 மற்றும் 9 ஆம் இடத்து அதிபதிகளைக் கொண்டு அறியலாம்.
ரிஷிகடனைத் தீர்க்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,தண்ணீர் ஏற்பாடு செய்தல்,ஆன்மீகமடங்களில் உதவி செய்தல்,சுத்தப்படுத்துதல், நோயாளிகளுக்கும்,கோவில்களுக்கும் நேரடியாக உதவி செய்தல் செய்ய வேண்டும்.

பித்ருக்கடன் என்பது தாய் தந்தையரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும்,அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு திதி செய்யாமல் இருத்தல்,அவர்கள் எவ்வளவு அரக்கக் குணங்களுடன் இருந்தாலும் அதை சகிக்காமல் அவர்களிடம் சாபம் வாங்குமளவுக்கு சேஷ்டைகள் செய்யாமல் இருத்தல் போன்றவைகளால் உருவாகுவது.
இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும்.தந்தை வழியில் செய்த காமக்குற்றங்கள், மோசடி,பெண்ணை ஏமாற்றிக்கற்பழித்தல்,உடன் பிறந்தோர் சொத்து அபகரிப்பு இவற்றால் 7 தலைமுறைகள் மிகவும் சிரமப்படுவர்.இந்த பித்ருக்கடனை அவரவர் பிறந்த ஜாதகத்தில் 5ஆம் இடம்,9 ஆம் இடம்,ராகு,கேது,சனி இவற்றைக் கொண்டு அறியலாம்.

சித்தர்களின் தலைவர் அகத்தியர் கர்ம காண்டம் என்னும் நூலில் செய்த பாவங்களுக்குரிய விளைவுகளை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும்.அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்.

பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன.அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம்(பூஜை,யாகம் செய்வது மட்டுமல்ல;நாம் நமது மனப்பூர்வமான இறை காரியங்கள் மட்டுமே நம்மை கடன்களிலிருந்து விடுவிக்கும்.நாம்தான் நமது பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.)

தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை இவற்றால் நிம்மதியாக வாழமுடியும்.

12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

நீங்கள் பிறந்த நட்சத்திர, ராசி யைப் பொருத்து, வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிடப்பட்டுள  கோவில்கள் சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்ப திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர , நீண்ட நாள் தீராத பிரச்சினைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தை பேறின்மை , குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி. இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகார ஸ்தலங்களாகும்.  ஆத்ம சுத்தியுடன் , பய பக்தியுடன் சென்று வழிபட்டு வாருங்கள். மங்களம் உண்டாகட்டும். !!!


மேஷ ராசி :
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்


ரிஷப ராசி :
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி ,திருநாகேச்வரம் 
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்

மிதுன ராசி : 
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொன்னிக்காடு 
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான் 

கடக ராசி :
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர் (தேனி ) 
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் ,திருபரங்குன்றம்

சிம்ம ராசி :  
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி 
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன் 

கன்னி ராசி :
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 


துலாம் ராசி :
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர் 


விருச்சிக ராசி  : 
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர் 
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை 
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி

தனுசு ராசி : 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

மகர ராசி :  
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள், துர்காதேவி -தர்மபுரம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்

கும்ப ராசி : 
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி , கரூர்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் , சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்

மீன ராசி : 
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிறந்த பரிகாரம்


ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

எவர்  ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார். 
நான் ஒண்ணுமே செய்ய முடியாது. என் கையிலே ஒண்ணுமே இல்லை. நான் ஒரு கையாலாகாதவன் , கோழை, யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க, நான் ஒரு அநாதை, நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட் , என்ன பண்ணினாலும், எவ்வளவு சம்பாதிச்சாலும் - கையிலே பைசா நிக்கவே இல்லை. இப்படி - பலப்பல எண்ணங்கள் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு அஷ்டம சனி யோ , இல்லை ஏழரை சனியோ நடந்து கொண்டிருக்கும்.

சிவனே னு நீங்க பாட்டுக்கு டூ வீலெர் ல போய்க்கிட்டு இருப்பேங்க, சம்பந்தமே இல்லாமே  திடீர்னு ஒரு நாய் , தேடி வந்து , ஏதோ உங்களுக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி , உள்ளே வந்து விழும். அப்புறம் என்ன, ஒரு மாசம் கட்டு போட்டு உக்காரணும். 

உற்றார் உறவினரை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருக்க வேண்டி வரும். நாம ரொம்ப நேசிக்கிற பொருள், உயிர், நண்பர்கள் எல்லாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டி வரும். அவரை மாதிரி ஒரு உத்தமன் உண்டானு சொல்லிக்கிட்டு இருந்த உலகம் , இப்போ கை கொட்டி சிரிக்கும்.

கவலையே படாதீங்க. இப்போ தான் நீங்க ஒரு பக்குவப்பட்ட மனுஷனா மாறி இருப்பீங்க. அசலுக்கும், போலிக்கும் இப்போ தான் வித்தியாசம் பார்க்க முடியும். நீங்க செஞ்ச பாவக் கணக்கு - நேராகுதுன்னு நினைச்சுக்கிட்டு - மனசை தேத்திக்கோங்க. 

ஆண்டவனுக்கு தெரியும். நமக்கு எது, எப்போ கிடைக்கனும்னு. மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம் பாஸு ! இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்க போறீங்க. ....

இது எல்லாமே, சனி யால அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக
ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.


பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று
சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி  மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும். 


உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.  

உங்களால் முடிந்த அளவுக்கு , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்துங்கள். 

வாழ்க வளமுடன்!