ஆத்திசூடி

 உயிர் வருக்கம்
1. அறம் செய்ய விரும்பு .
2. ஆறுவது சினம் .
3. இயல்வது கரவேல் .
4. ஈவது விலக்கேல் .
5. உடையது விளம்பேல் .
6. ஊக்கமது கைவிடேல் .
7. எண் எழுத்து இகழேல் .
8. ஏற்பது இகழ்ச்சி .
9. ஐயம் இட்டு உண் .
10. ஒப்புரவு ஒழுகு .
11. ஓதுவது ஒழியேல் .
12. ஔவியம் பேசேல் .
13. அஃகம் சுருக்கேல் .

உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல் .
15. ஙப் போல் வளை .
16. சனி நீராடு .
17. ஞயம்பட உரை .
18. இடம்பட வீடு எடேல் .
19. இணக்கம் அறிந்து இணங்கு .
20. தந்தை தாய்ப் பேண் .
21. நன்றி மறவேல் .
22. பருவத்தே பயிர் செய் .
23. மண் பறித்து உண்ணேல் .
24. இயல்பு அலாதன செய்யேல் .
25. அரவம் ஆட்டேல் .
26. இலவம் பஞ்சில் துயில் .
27. வஞ்சகம் பேசேல் .
28. அழகு அலாதன செய்யேல் .
29. இளமையில் கல் .
30. அரனை மறவேல் .
31. அனந்தல் ஆடேல் .

ககர வருக்கம்
32. கடிவது மற .
33. காப்பது விரதம் .
34. கிழமைப்பட வாழ் .
35. கீழ்மை அகற்று .
36. குணமது கைவிடேல் .
37. கூடிப் பிரியேல் .
38. கெடுப்பது ஒழி .
39. கேள்வி முயல் .
40. கைவினை கரவேல் .
41. கொள்ளை விரும்பேல் .
42. கோதாட்டு ஒழி .
43. கௌவை அகற்று .

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில் .
45. சான்றோர் இனத்து இரு .
46. சித்திரம் பேசேல் .
47. சீர்மை மறவேல் .
48. சுளிக்கச் சொல்லேல் .
49. சூது விரும்பேல் .
50. செய்வன திருந்தச் செய் .
51. சேரிடம் அறிந்து சேர் .
52. சையெனத் திரியேல் .
53. சொற் சோர்வு படேல் .
54. சோம்பித் திரியேல் .

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி .
56. தானமது விரும்பு .
57. திருமாலுக்கு அடிமை செய் .
58. தீவினை அகற்று .
59. துன்பத்திற்கு இடம் கொடேல் .
60. தூக்கி வினை செய் .
61. தெய்வம் இகழேல் .
62. தேசத்தோடு ஒட்டி வாழ் .
63. தையல் சொல் கேளேல் .
64. தொன்மை மறவேல் .
65. தோற்பன தொடரேல் .

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி .
67. நாடு ஒப்பன செய் .
68. நிலையில் பிரியேல் .
69. நீர் விளையாடேல் .
70. நுண்மை நுகரேல் .
71. நூல் பல கல் .
72. நெற்பயிர் விளைவு செய் .
73. நேர்பட ஒழுகு .
74. நைவினை நணுகேல் .
75. நொய்ய உரையேல் .
76. நோய்க்கு இடம் கொடேல் .

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல் .
78. பாம்பொடு பழகேல் .
79. பிழைபடச் சொல்லேல் .
80. பீடு பெற நில் .
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் .
82. பூமி திருத்தி உண் .
83. பெரியாரைத் துணைக் கொள் .
84. பேதைமை அகற்று .
85. பையலோடு இணங்கேல் .
86. பொருள்தனைப் போற்றி வாழ் .
87. போர்த் தொழில் புரியேல் .

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல் .
89. மாற்றானுக்கு இடம் கொடேல் .
90. மிகைபடச் சொல்லேல் .
91. மீதூண் விரும்பேல் .
92. முனைமுகத்து நில்லேல் .
93. மூர்க்கரோடு இணங்கேல் .
94. மெல்லி நல்லாள் தோள்சேர் .
95. மேன்மக்கள் சொல் கேள் .
96. மை விழியார் மனை அகல் .
97. மொழிவது அற மொழி .
98. மோகத்தை முனி .

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல் .
100. வாது முற்கூறேல் .
101. வித்தை விரும்பு .
102. வீடு பெற நில் .
103. உத்தமனாய் இரு .
104. ஊருடன் கூடி வாழ் .
105. வெட்டெனப் பேசேல் .
106. வேண்டி வினை செயேல் .
107. வைகறைத் துயில் எழு .
108. ஒன்னாரைத் தேறேல் .
109. ஓரம் சொல்லேல் .

No comments:

Post a Comment